Home இந்தியா சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி:

சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி:

by admin

மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

மழைநீருக்குள் மும்பை நகரம் மிதப்பதால் புறநகர் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செம்பூர் பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்துவிழுந்ததில் 15 பேர் உயிாிழந்துள்ளதுடன் 16 பேர் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் 2-வது சுற்று தீவிரமடைந்துள்ளதால், மும்பைக்கு 48 மணிநேர சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்த நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி மும்பை மற்றும் புறநகரில் மட்டும் 120மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More