Home இலங்கை மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களைக் காணவில்லை

மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களைக் காணவில்லை

by admin

கடந்த 9ம் திகதி புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் 10 நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் கவலை தொிவித்துள்ளனா்

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21) ஆகிய மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பில் கற்பிட்டி காவல்நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள குறித்த மீனவர்களின் குடும்பத்தினா் கற்பிட்டி மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் அவா்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக மன்னார் காவல்துறையினா் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என தொிவித்துள்ள மீனவர்களின் உறவினர்கள் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மீனவா்கள் காணாமல் போனமை தொடா்பில் கற்பிட்டி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More