Home இலங்கை வடமாகாண பிரதம செயலாளர் பதவியேற்பு

வடமாகாண பிரதம செயலாளர் பதவியேற்பு

by admin

வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று திங்கட்கிழமை  பதவிகளை பொறுப்பெற்றுக்கொண்டார். வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக கடந்த 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் முன்பு ஏற்றிருந்த பொறுப்புக்களை கையளித்த பின்னர் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பெற்றுக்கொண்டார்.

பிரதம செயலாளராக தமிழ் மொழி தெரியாதவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு , வடக்கு அரசியல் வாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வடமாகாண சபையின் அவைத்தலைவர் , முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதம செயலாளரை மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானித்தும்  உள்ளனர். 

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் தனது பதவியினை பொறுப்பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More