கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (06) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று(04) நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்ஸ, இந்த சட்டமூலம் தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதனால் சட்டமூலம் மீதான விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.