உலகம் பிரதான செய்திகள்

இங்கிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் 6போ் பலி

இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிளைமவுத் (Plymouth) நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நபா் ஒருவா் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டுபெண்கள் அடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தனது குடும்பத்தவர்களையும் எதிர்ப்பட்டவர்களையும் கண்டபடிசுட்டுள்ளார் என்று முதலில் வெளியானதகவல்கள் தெரிவித்தன.

பாரம் தூக்கும்வாகனம் ஒன்றின் சாரதி எனக் கூறப் படும் அந்த இளைஞன், முதலில்வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர்களைச் சுட்டுவிட்டு வெளியே வந்துவழிப்போக்கர்களையும் தாக்கியுள்ளார். காயமடைந்த சிலர் அம்புலன்ஸ் ஹெலிமூலம் மீட்கப்பட்டனர்.

நேற்றிரவு காவற்துறையினர் சம்பவம் நடந்தபகுதியை மூடித் தேடுதல்களை மேற்கொண்டனர்.இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று மறுத்துள்ள அதிகாரிகள்,பிரதேச மக்களை அமைதி பேணுமாறு கேட்டுள்ளனர். தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கின்ற உள்துறைஅமைச்சர் ப்ரிதி பட்டேல் (Priti Patel), பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்குஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கிதாாியும் குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்து உயிாிழந்துள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.