Home இலங்கைஇலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பயணித்தால் கைது!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பயணித்தால் கைது!

by admin

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயண கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் இன்று (14.08.21) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் முழுமையான பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More