Home உலகம் அமெரிக்காவில் இடா சூறாவளி – இதுவரை 42 பேர் பலி

அமெரிக்காவில் இடா சூறாவளி – இதுவரை 42 பேர் பலி

by admin

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயோர்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் பாய்கின்றது.

லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.

சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளநிலையில், நியூயோர்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

தற்போது நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் நகர சுரங்க புகையிரத சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது

நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சியை தாக்குவதற்கு முன்பாக நியூ ஓர்லியான்ஸ் பகுதியில் பலத்த சேதத்தை இடா சூறாவளி ஏற்படுத்தியிருந்தது. அங்கு வீசிய கடுமையான காற்றால் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் கவிழ்ந்தன.

நியூ ஓர்லியான்ஸ் பகுதியில் இதுபோன்ற வேகத்தில் சூறாவளி வருவது கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும் இதற்கு முன்பு 2005இல் வீசிய கேத்ரினா சூறாவளியின்போது அங்கு 1,800 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More