Home இலங்கை பிறந்தநாள் கொண்டாட்டம் – யாழில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பிறந்தநாள் கொண்டாட்டம் – யாழில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

by admin

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அவற்றை மீறி யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும், ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பிரிவினரும் , யாழ்ப்பாண காவற்துறையினரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More