இலங்கை சென்றுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டவர்களை இன்று (04.10.21) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரையும் இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திக்கவுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியற்றின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.