குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் , உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறாதவாறு சமூகத்தில் இருந்து அவற்றை முற்றாக அகற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
திணைக்கள தலைவர்ககளை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய போதே அவா் அவ்வாறு தெரிவித்தார். மேலும், பாதுகாப்பான சூழல், பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள், கொரோனா தொற்று தொடர் நடவடிக்கை, பாடசாலைகளை மீள ஆரம்பித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்குகின்ற பொறிமுறை பற்றி கலந்துரையாடினார்.