Home இலங்கை மாணவனை தோப்புக்கரணம் போட வைத்த விவகாரம் – விசேட குழு விசாரணை

மாணவனை தோப்புக்கரணம் போட வைத்த விவகாரம் – விசேட குழு விசாரணை

by admin

மாணவனை  200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு , ஆசிரியர் சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க மூவர் கொண்ட விசாரணைக்குழுவை மாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.


வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் பயிலும் மாணவனை சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு கடந்த புதன்கிழமை  தண்டனையளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் பாடசாலைக்குச் சென்ற போது மாணவனை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு உள்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டுள்ளார்.

அவருக்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவானாலும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகளவு தடவை தோப்புக்கரணம் செய்யவைப்பது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிரைப் பறிக்கும் வகையிலான சித்திரவதை என்று மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலையே , மூவர் கொண்ட விசாரணைக்குழுவை மாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More