
நாட்டை சுற்றி வரும் போது, தமக்கும் அதிர்ஷ்டலாபச் சீட்டு விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து உரையாடிய அவர்,அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் போது தம்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
அந்த வகையில் சந்தைக்குச் சென்ற 24 மணிநேரத்தில் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment