Home இலங்கை 2020ல், முள்ளியவளையில் கொலை! 2022ல் மனைவி உட்பட மூவர் கைது!

2020ல், முள்ளியவளையில் கொலை! 2022ல் மனைவி உட்பட மூவர் கைது!

by admin

முள்ளியவளை காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான காவற்துறைக் குழுவினர் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (20.01.22) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More