Home இலங்கை தமிழக மீனவர்களின் படகுகள் 52 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

தமிழக மீனவர்களின் படகுகள் 52 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

by admin

யாழ்ப்பாணம் காரைநகரில் 135 இந்தியப் படகுகள் இன்று ஏலத்தில் விடப்பட்டதில் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.

ஏலத்தின் நிறைவில் ஏலம் கேட்டவர்களால் மொத்தமாக 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதி பணமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தப்பட்டு படகுகள் அங்கிருந்து எடுத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில் 135 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே இன்று ஏலத்தில் விடப்பட்டன.

கொழும்பில் இருந்து வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலத்திற்கான பணிகள் யாவும் மாலை 2 மணி வரை இடம்பெற்றன.

இதன்போது 135 படகுகளும் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டன. இவற்றில் உட்ச பட்சமாக ஓர் படகு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More