இலங்கை பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் சமுதித சமர விக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்!

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (14.02.22) அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத நான்கு நபர்கள் வாகனத்தில் சென்று தனது வீட்டில் இருந்த பாதுகாவலரை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. பல தடவைகள் தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.