Home இந்தியா இலங்கைக்கு கடத்த இருந்த போதைப் பொருளுடன் 8 பேர் கைது!

இலங்கைக்கு கடத்த இருந்த போதைப் பொருளுடன் 8 பேர் கைது!

by admin

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு காவற்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு காவற்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து காவற்துறையினர் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்ததுது தெரியவந்தது.

இந்த போதைப்பொருள் இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த நிலையில் இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை காவற்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்த 30கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More