இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து 200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதனால் இந்திய அணி 62 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.