முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மோசடி குற்றச்சாட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவா் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் புனர்வாழ்வு அமைச்சுக்கு நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாக அவா் மீது குற்றம் சுமத்தி அவருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதிமன்றில் இன்று(29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.