இலங்கை பிரதான செய்திகள்

அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்!

அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அலரிமாளிகைக்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதனால் இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மைனாகோகம மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதனை புகைப்படம் எடுத்தபோதே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களை காண்பித்துள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.