Home இலங்கை ஐயோ நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – அலறுகிறார் சபாநாயகர்!

ஐயோ நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – அலறுகிறார் சபாநாயகர்!

by admin

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கருத்திற் கொண்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மே 17ஆம் திகதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும் இன்றும் நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அமைச்சரவையும் செயலிழந்துள்ளது. இந்த நிலையில் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More