Home இலங்கை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கி நிலையில் மீட்பு!

தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கி நிலையில் மீட்பு!

by admin

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27.06.22) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் சென்று இறங்கினர். இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More