வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்துவதாக .ருந்தால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டுள்ள அவர், அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு இடம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு இராணுவம் மற்றும் காவற்துறையினருக்கு நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குழப்பமும் பலமும் பொருளாதாரத்தை சரி செய்யாது அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.