Home இலங்கைபிரதமாின் வீடு தீக்கிரை – கைதானவா்கள் விளக்கமறியலில்

பிரதமாின் வீடு தீக்கிரை – கைதானவா்கள் விளக்கமறியலில்

by admin

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜூலை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமாின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More