கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது