Home உலகம் பில் கேட்ஸ் அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டம்

பில் கேட்ஸ் அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டம்

by admin

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசொப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளார். 20 இதுகுறித்து பில் கேட்ஸ் கூறியதாவது:

“எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிக பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன். மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். “என அவர் தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்திருந்தாா். இந்த அறக்கட்டளை மூலம் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More