Home இலங்கை போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்

by admin

காலிமுகத் திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பலரும் வன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலிமுகத் திடல் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் என குறித்த கடிதத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை , போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கடுமையான தாக்குதல் தொடர்பில் பல்வேறு சர்வதேச சமூகம் சார்ந்த அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More