Home இலங்கை சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய காவல்துறையினா்

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய காவல்துறையினா்

by admin

யாழ்ப்பாணம் கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப காத்திருந்த சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு எரிபொருள் பெறுவதற்காக பலர் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்துள்ளனர். 

அதன் போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு வரிசை இன்றி எரிபொருள் விநியோகித்துள்ளனர். 

அதனை அவதானித்த சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சன் உள்ளிட்ட சிலர் அங்கிருந்த காவல்துறையினர்  மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களிடம் நியாயம் கேட்டுள்ளனர். 

அவ்வேளை அங்கு கடமையில் இருந்த காவல்துறை  உத்தியோகஸ்தர் ஒருவர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரை தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். 

அதனை அவதானித்த வரிசையில் உள்ள பலரும் அச்சத்திற்கு உள்ளாகி , அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More