
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவரும் ராஜபக்ஸ குடும்ப உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (17) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த வேளையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக உதயங்க வீரதுங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment