Home உலகம் 10 குழந்தைகள் பெறுபவா்களுக்கு பட்டத்துடன் பெரும் தொகையும் பாிசு

10 குழந்தைகள் பெறுபவா்களுக்கு பட்டத்துடன் பெரும் தொகையும் பாிசு

by admin

ரஸ்யாவில் 10 குழந்தைகள் அல்லது அதற்கு அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி புதின் அறிவித்துள்ளாா்.

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பெரும் உயிரிழப்பை ஈடுசெய்ய ரஸ்யப் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் (அப்போதைய ரஷ்யா) ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி 10 குழந்தைகள் கௌரவப் பட்டம் சோவியத் யூனியனால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அதனைப் பெற்றிருந்தனர்.

1992 ஆம் ஆண்டு சோவித் யூனியன் வீழ்ந்ததன் பின்னா் இத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் இதே அறிவிப்பை தற்போது ர புதின் மீண்டும் அறிவித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ரஸ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் அதுவும் குறிப்பாக கொரோனா, உக்ரைனுடான போர் போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் மேலும் குறைந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை ஈடு செய்யவே இந்த அறிவிப்பை புதின் அறிவித்திருக்கிறார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து புதின் வெளியிட்டுள்ள ஆணையில், ரஸ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஸ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.

தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இவ்விருது கிடைக்கும். போர், தீவிரவாத செயல், உடல் நலக்குறைவு, விபத்து சூழல் காரணமாக ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

புதினின் இந்த அறிவிப்பினை சர்வதேச பெண்கள் அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன என்கது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More