காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷந்த ஜவந்த குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக காவற்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கொழும்பு யூனியன் பிளேஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்ட பதினாறு பேருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிணை வழங்கியுள்ளார்.