Home இலங்கை  கடல் மூலமாக இந்தியாவுக்குச் சென்று மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட கைக்குழந்தை உள்ளிட்ட 8 போ்

 கடல் மூலமாக இந்தியாவுக்குச் சென்று மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட கைக்குழந்தை உள்ளிட்ட 8 போ்

by admin

 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கைக்குழந்தையுடன்  8 போ் இறக்கி விடப்பட்ட நிலையில்,இன்று ஞாயிற்றுக் கிழமை (21)காலை அவா்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்  மக்கள் இந்தியா, அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழி பாதை ஊடாக பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கைக் குழந்தையுடன் மூன்று லீட்டர் தண்ணீருடன் 8 நபர்கள் படகோட்டிகளினால் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் திட்டியில் தஞ்சம் அடைந்தவர்களை  இந்திய கடலோர காவல்படை இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை (21) மீட்டு மரைன் காவல்துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர். அவர்கள் விசாரணைகளின் பின்னா் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு  முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. 

ஏற்கனவே இலங்கையில் இருந்து 34 போ் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு மூதாட்டி உயிரிழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More