Home இலங்கை நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவாின் சடலங்கள் மீட்பு

நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவாின் சடலங்கள் மீட்பு

by admin

மாத்தறை, பிட்டபெத்தர பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவர், இன்று (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

முன்னதான கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் மண்ணெண்ணெய் மற்றும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக தேடுதல் இடைநிறுத்தப்பட்டது. பின்னர், கடற்படையினர், காவல்துறையினா் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவ்வாறு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22, 23, 24 வயதான இளைஞர்களின் உடல்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் 4 வயதான இளைஞர் ஒருவா் காணாமற் போயுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More