Home இலங்கை கனிய மண் அகழ்வு –   காற்றாலை மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

கனிய மண் அகழ்வு –   காற்றாலை மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

by admin

மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வருகின்ற   கனிய   வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு  ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை (29) காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு,மீனவ அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமத தலைவர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதியம் 12 மணி வரை பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு,தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்,இச் சிறிய தீவின் நிலப்பரப்பில் கனிய மண் அகழ்ந்து இத்தீவு முழுவதுமாக கடலில் மூழ்கடிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து,காற்றாலை மின் கோபுரங்களை அமைத்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து,எம்மை உயிருடன் வாழவிடு,ஆர்ப்பாட்டமே எங்கள் வாழ்க்கையா?? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

-போராட்டத்தை தொடர்ந்து கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் ஆகிய வற்றிற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெற்று கொள்ளப்பட்டு,ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More