Home இலங்கை 3 இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த மதகுருவை கைது செய்ய நடவடிக்கை

3 இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த மதகுருவை கைது செய்ய நடவடிக்கை

by admin

3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்   வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய காவல்துறையினரினால்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட    விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த  3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு  கல்முனை ஆதார  வைத்தியசாலையில் கடந்த மாதம்(ஓகஸ்ட்) இறுதி பகுதியில்  பெற்றோரினால்   அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது  வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான  தனியான சிகிச்சை பிரிவிற்கு    3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக  மாற்றப்பட்டு  சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால்  பாலியல்  துஸ்பிரயோகத்திற்கு ஆளாகிதாக  சட்ட வைத்திய அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகாிடம்   குறிப்பிட்டிருந்தார்.

 இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில்  மருத்துவ அறிக்கை பிரகாரம்   செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அத்துடன் செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக காவல்நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டது.

இதற்கமைய  செப்டம்பர் 06 ஆந் திகதி துஸ்பிரயோகம் காரணமாக  பாதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட  பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு   கல்முனை நீதிவான் நீதிமன்று  கல்முனை தலைமையக  காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது குறித்த  பௌத்த மதகுரு தலைமறைவாகி உள்ளதாகவும்   விசேட காவல்துறை குழுவினர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் சந்தேக நபராக  இனங்காணப்பட்ட  பிரதான பௌத்த மதகுரு கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த படுதல்  தொடர்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

   பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான  சகோதரர்களான  08 , 13 , 14 , வயது மதிக்கத்தக்க   3 இளம் பிக்குகளும் ஏற்கனவே   அம்பாறை  புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்  அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More