Home இலங்கை சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் கைது

by admin

மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினரால் மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 ஆண்களும் 14) பெண்களும் 18 வயதுக்குட்பட்ட பதினொரு சிறுவா்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவா்களும் அவா்கள் பயணித்த மீன்பிடி படகும் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More