தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று( 12) திங்கட்கிழமை இரவு சுமார் 10 மணியாளவில் ஏற்பட்ட ஒரு பெரும் தீவிபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிாிழந்துள்ளர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விடுதி அமைந்துள்ள அதே கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள மின்சார பைக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவியதாகவும் தீ பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.