Home இலங்கை  சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது.

 சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது.

by admin

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(13) இரவு பேசாலை -தலைமன்னார் கடல் பகுதியில்  வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 3 இளைஞர்களும், பெண்களும்,18 வயதிற்கு குறைவான 3 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனா். கைதுசெய்யபட்டவர்கள் வவுனியா,திருகோணமலை மற்றும் தலைமன்னார்  ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை ஊடாக பேசாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் அவா்கள் நேற்று புதன்கிழமை(14) மாலை மன்னார் நீதிமன்றத்தில்முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

-இதன் போது மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும்,ஏனைய 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்தார்.

-மீண்டும் குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி (14-12-2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More