Home இலங்கை தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்கள் மீட்பு:-

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்கள் மீட்பு:-

by admin

  தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் காணப்பட்ட இலங்கை தமிழர்கள் 12 பே ரை இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

மரைன் காவல்துறையினா் நடத்திய விசாரணையில்    யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த   குறித்த 12 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து பின் 2019 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும்  இன்று அதிகாலை  ஒரு  படகில் புறப்பட்டு இன்று காலை  சுமார் 7 மணி அளவில் தனுஷ்கோடி இரண்டாம்  மணல் திட்டில்; வந்திறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

பட்டினிச் சாவில் இருந்து தமது உயிரைக் காப்பாற்றி கொள்ள இலங்கையை சேர்ந்த ஒருவரிடம் வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து  படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் , அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More