Home இலங்கை காணாமல் போன பேராதனை பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

காணாமல் போன பேராதனை பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

by admin

கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற குறித்த மாணவனின் சடலம் இன்று (21) மாலை,   மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளது. அவாின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16ஆம் திகதி முதல் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில், பெற்றோர் பேராதனைக்கு சென்ற பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 

அதில் தன்னைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாணவனின் பெற்றோர் பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது,  ஆற்றிலிருந்து சடலம் மிகவும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More