Home இலங்கை ரவிகரன் – மயூரன் கைது

ரவிகரன் – மயூரன் கைது

by admin

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இருவரையும் முல்லைத்தீவு காவல்துறையினா் காவல்நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று காவல்நிலையம் சென்ற இருவரையும் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கைது செய்த இருவரையும் இன்று காவல்துறையினா் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர் .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More