Home இலங்கை இராணுவ சிப்பாய் தாக்கியதில் ஒருவா் பலி

இராணுவ சிப்பாய் தாக்கியதில் ஒருவா் பலி

by admin

இராணுவ சிப்பாய் ஒருவர் தம்பதியினரைத் தாக்கியதில் கணவர் உயிரிழந்துள்ளார் எனவும் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி-இங்குருஓயாவைச் சேர்ந்த உயிரிழந்தவர் 48 வயதுடைய   2 பிள்ளைகளின் தந்தை எனவும் நாவலப்பிட்டி காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

நேற்றுக்(8) காலை 11 மணியளவில் இங்குருஓயா உடைந்த பாலத்துக்கு அருகில் , சந்தேகநபரான இராணுவ சிப்பாய் மூங்கில் வெட்டிக்கொண்டிருந்த போது, அந்த பாதை வழியாக சென்ற தம்பதிக்கும் சந்தேகநபருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இராணுவ சிப்பாய் தடியொன்றினால் கணவனையும் மனைவியையும் தாக்கியுள்ளார்.

இதன்போது அயலவர்களால் கணவனும் மனைவியும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கணவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (8) மாலை  உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைககளை நாவலப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்., இரு குடும்பத்துக்குமிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் பகையே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More