இலங்கை பிரதான செய்திகள்

தரிந்து ஜயவர்தனவுக்கு காவல் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல்

புறகோட்டை காவல்நிலையத்திற்கு முறைப்பாடொன்றைப் பதிவு செய்வதற்காகச் சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்கு காவல் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வுக்கு காவல்துறையினா் விதித்திருந்த தடைகளைக் கண்டித்து, நேற்று (10) சட்டத்தரணிகள் உள்ளிட்டப் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன கோட்டை காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தபோதிலும், அவ்வாவு அவா் அறிவிக்கவில்லை எனத் தொிவித்து நேற்றைய   போராட்டப் பேரணிக்கும் காவல்துறையினா் இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.

காவல்துறையினரின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக கோட்டை காவல்நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றிருந்த இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் முறைப்பாட்டை காவல்துறையினா் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

அத்துடன் காவல்நிலையப் பொறுப்பதிகாரி முறைப்பாட்டைப் பதிவு செய்ய சென்றிருந்த தனது கையடக்க தொலைபேசியை பறிக்க முயற்சித்ததோடு தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தரிந்து ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.