Home இலங்கை வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் வழக்கு நவம்பர் 10 வரை ஒத்திவைப்பு!

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் வழக்கு நவம்பர் 10 வரை ஒத்திவைப்பு!

by admin

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (18.10.22) அனுமதி வழங்கியது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகளின் அடிப்படையில், மேலும் பிரதிவாதிகளை சேர்க்க வேண்டியுள்ளதால் தலைப்புகளில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் கோரிநின்றார்.

அவரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய எஸ்.துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், திருத்தங்கள் குறித்த ஆட்சேபனைகளை இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

மேலும், திருத்தப்பட்ட மனுவில் குறிப்பிடப்படும் புதிய பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவித்த நீதியரசர்கள் குழாம், மனுக்களை நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More