Home இலங்கை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும்

by admin

வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கடற்தொழில் அமைச்சரின் ஊடக பிரிவுக்கு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

  வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில், அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். அது தொடர்பான அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டும்.

மேலும், வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச் சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றிற்கு வழங்க வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடலிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், குறித்த விடயத்தினை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. என செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More