Home இலங்கை மாத்தறை – திஹகொட மாணவர் மீதான துப்பாக்கிச் சூடு – விசாரணை ஆரம்பம்!

மாத்தறை – திஹகொட மாணவர் மீதான துப்பாக்கிச் சூடு – விசாரணை ஆரம்பம்!

by admin

மாத்தறை – திஹகொட பகுதியில் காவற்துறையினரின் துப்பாக்கி தவறுதலாக? இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாத்தறை மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் குழுவொன்று இன்று (29.10.22) குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்க உள்ளது.

துப்பாக்கிச் சூடு – திஹாகொட காவல் நிலையத்தில் பதற்றநிலை!

மாத்தறை திஹாகொடவில் நேற்று (28.10.22) காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக? இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திஹாகொட காவல் நிலைய வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினார்.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட காவல் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பதற்றநிலை ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய உதவி காவற்துறை பரிசோதகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More