இலங்கை பிரதான செய்திகள்

ரிஷாட் பதியூதீன் விடுதலை

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் சந்​தேகநப​ராக கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை ​நீதவான் திலிண கமகே, இன்று (02) பிறப்பித்துள்ளாா்.

சம்பவத்துடன் தொடர்புடைய நீதவான் விசாரணையை மீண்டும் கோாிய போதே நீதவான் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று ரிஷாட் பதியூதீன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ​தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.