Home இலங்கை திருமணப் பதிவுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு!

திருமணப் பதிவுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு!

by admin

வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் இடையேயான திருமணப் பதிவுகளுக்கு காணப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சுற்றுநிருபத்தை இரத்து செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் P.S.P.அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜையை திருமணம் செய்ய தயாராக இருக்கும் வெளிநாட்டவரிடமிருந்து, உடல் நலத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும் சுகாதார அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தவிர, குற்றவியல் குற்றங்களுடன் தொடர்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையை பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அந்த கட்டுப்பாடுகளை இலகுபடுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, மாற்று நடைமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகிவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் P.S.P.அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More