
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் எந்த தேர்வின் போதும் அவரை கருத்தில் கொள்ள மாட்டோம் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொிவித்துள்ளது.
தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment