Home இலங்கை சீரற்ற காலநிலை காரணமாக யாழில்  3 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழில்  3 குடும்பங்கள் பாதிப்பு!

by admin

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில்  மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர்  என்.சூரியராஜ் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

இதன்காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஜே/298 மறவன்புலவு, ஜே/339 வரணி வடக்கு, ஜே/145 வடலியடைப்பு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More