Home இலங்கை டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்க்பட்ட இலங்கையர் மூவரை உகண்டாவுக்கு அனுப்ப முயற்சி?

டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்க்பட்ட இலங்கையர் மூவரை உகண்டாவுக்கு அனுப்ப முயற்சி?

by admin

டியாகோ கார்சியா தீவில்  தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக “The New Humanitarian” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர்கள் உயிரைப் பணயம் வைத்து படகில் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த தீவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்றவர்கள் சிலர் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள “ரீ யூனியன்” தீவுக்கு படகுகளில் ஏறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜொன்சன் பதவி வகித்த காலத்தில், ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் இருந்தது, அது நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக  கைவிடப்பட்டது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டுக்கு அகதிகளை அனுப்பும் பிரித்தானிய அதிகாரிகளின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More